Saturday, March 24, 2007

அவியல்

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் - 1 துண்டு
பூசணி - 1 துண்டு
பெரிய தேங்காய் மூடி - 1
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
தேங்காய் எண்ணை - 1 கரண்டி
உப்பு
மஞ்சள் பொடி
தயிர் - 1 கப்
அரிசிமாவு - 1 ஸ்பூன்
கொத்துமல்லி, கருவேப்பிலை
காய்கறிகள்: அவரை, பீன்ஸ், கொத்தவரை, சர்க்கரைவள்ளிகிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு, பட்டாணி, பெங்களூர் கத்தரி - தேவைக்கேற்ப

செய்முறை:

1. சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு - இவற்றை வேகவைத்து தோல் உரித்துக்கொண்டு துண்டுகளாக்கவும்.
2. மற்ற காய்கறிகளையும் துண்டங்களாக்கி சிறிது மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு வேகவைக்கவும்.
3. தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்துக்கொள்ளவும்.
4. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், சிறிது உப்பு - இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து அரிசிமாவும் சேர்த்து தயிரில் கரைத்து வெந்துகொண்டிருக்கும் காய்களில் விடவும்.
5. உரித்த கிழங்குகளையும் அதில் போடவும்.
6. தேங்காய் எண்ணையை காயவைத்து அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அவியலில் கொட்டி இறக்கவும்.

No comments: