Saturday, March 24, 2007

கத்தரிக்காய் அசடு

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ
சர்க்கரைவள்ளிகிழங்கு - 1
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
துறுவிய தேங்காய் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 4 (காய்ந்த மிளகாய்)
பெருங்காயம் - 1 சிட்டிகை
வெல்லம் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 1.5 ஸ்பூன்

செய்முறை:

1. கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும் (தண்ணீரில் போடாவிட்டால் கருத்துவிடும்).
2. சர்க்கரைவள்ளிகிழங்கை சதுர வடிவுத் துண்டுகளாக்கவும்.
3. புளியை 2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைக்கவும்.
4. துவரம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும்.
5. கரைத்த புளி நீரில் சர்க்கரைவள்ளிகிழங்கு, கத்தரிக்காய்கள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்கவைக்கவும்.
6. காய்கள் வெந்தபின் வேகவைத்த பருப்பை போடவும்
7. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் - இவற்றை எண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.
8. பருப்பு போட்டு கூட்டு கொதிக்கும் போது அரைத்த விழுதையும் போடவும்.
9. பிறகு 1/2 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
10. கொதித்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

1 comment:

OURFAMILYRECIPES said...

ஹலோ Aunty நமஸ்காரம்
அசடு எங்கம்மா பண்ணியது எப்பவோ சாப்பிட்டது.இப்பொது எங்கம்மா இல்லை.சரியாக கேட்டு வைத்துக்
கொள்ளவில்லை.திடீரென்று உங்க blog இல் பார்த்தேன்
.ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மிக்க நன்றி
மீண்டும் சந்திப்போம்.