தேவையான பொருட்கள்:
மேல்கூறிய காய்களில் ஏதேனும் ஒன்று - தேவைக்கு ஏற்ப
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 (காய்ந்த மிளகாய்)
தேங்காய் - 1/2 மூடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை:
1. காய்களை பொடியாக நறுக்கி கழுவி நீர்விட்டு வேகவைக்கவும்
2. துவரம் பருப்பை மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
3. காய்கள் வேகும் பொழுது சாம்பார் பொடி, உப்பு போடவும்.
4. காய்கள் நன்றாக வெந்தபின் வெந்த பருப்பை போடவும்.
5. கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் - இவற்றை எண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.
6. பிறகு 1 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
7. பெருங்காயப் பொடியை ஒரு சிட்டிகை சேர்த்து சற்று நேரத்தில் இறக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
very useful blog. keep it up.
Post a Comment