Saturday, March 24, 2007

வாழைத்தண்டு புளிக்கூட்டு

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 3/4 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3 (காய்ந்த மிளகாய்)
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
மோர் - 1 சிறிய கப்

செய்முறை:

1. வாழைத்தண்டின் மேல் பட்டையை எடுத்துவிட்டு நீள வாக்கில் சிறு துண்டங்களாக நறுக்கி மோர் கலந்த நீரில் போடவும்.
2. துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
3. புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து அதில் நறுக்கிய வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
4. காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்புகளை போட்டு கொதிக்கவிடவும்.
5. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தாளித பொருட்களை 1 ஸ்பூன் எண்ணைவிட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, அரைத்து கூட்டில் சேர்க்கவும்.
6. எல்லாம் சேர்ந்து கொதித்தப்பின் இறக்கவும்.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்வரவு ராஜி அவர்களே..

ராஜி said...

நன்றி முத்துலெட்சுமி.

booma said...

Hi Usha, You have created a nice blog. Wishing u all success.
Regards
Sudha